20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
அபிராமி கவிதாசன்.
17.05.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -175
தலைப்பு !
“தீயில்எரியும் எம்தீவு”
எரிகிறதே என்தீவென்று
ஏன்சிந்துகின்றீர் கண்ணீரை
அரிதங்கு வாழ்வதென்ற
அவலத்தை அறிந்தீரோ /
பெற்றதாய் வயிறெல்லாம்
பற்றியே எரிந்து
வற்றாத நதியாகி
வடிந்ததே விழிநீர் /
ஓடியும் உயிர்தப்பி
ஒழியவும் முடியாது
வாடியே உயிர்விட்ட
வயோதியர் சாபமோ /
அம்மா என்றோடி
அணைத்த பிள்ளைமுன்
அய்யோ என்றலரும்
அன்னையின் சபதமோ /
பெண்குலத்தை இழிவாக்கி
பெருந்துயரை உருவாக்கி
கண்முன்னே சூரையாடிய
கருணையற்ற பாவமோ /
தீயில் எரியும்
தீவின் கொடுமை
புவியினில் வேறெங்கும்
புலர்ந்திடல் ஆகாது /
கரியாகி குவியும்
கண்ணீர் உடல்கள்
எரிகிறதே ஈழம்
என்று தணியும் /
நன்றி வணக்கம்
பாவை அண்ணா 🙏

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...