உழைப்பே உயர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026

அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் நுழைந்து
வியர்வையை நதியாய் கொண்டு
வையத்தை வாழ வைப்போர்.

வியர்வை நிலத்தில் விழும்போது
வறுமை ஒழிந்து போகிறது
தேய்ந்த காலணி சொல்லும்
நொந்து வந்த போராட்டச் சுவடுகள்

வளைந்து நிற்கும் முதுகுத் தண்டு
வரலாற்றைத் தாங்கும் தூண் இன்று
உழைப்பவர்கள் ஒன்று பட்டால்
உழைப்பே உயர்வு தரும்

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்
உறங்கிப் போனவர்கள் அல்ல…
உலகம் உறங்கும் வேளையிலும்
உழைப்பைத் தொடர்ந்தவர்கள்!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading