” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உழைப்பே உயர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026

அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் நுழைந்து
வியர்வையை நதியாய் கொண்டு
வையத்தை வாழ வைப்போர்.

வியர்வை நிலத்தில் விழும்போது
வறுமை ஒழிந்து போகிறது
தேய்ந்த காலணி சொல்லும்
நொந்து வந்த போராட்டச் சுவடுகள்

வளைந்து நிற்கும் முதுகுத் தண்டு
வரலாற்றைத் தாங்கும் தூண் இன்று
உழைப்பவர்கள் ஒன்று பட்டால்
உழைப்பே உயர்வு தரும்

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்
உறங்கிப் போனவர்கள் அல்ல…
உலகம் உறங்கும் வேளையிலும்
உழைப்பைத் தொடர்ந்தவர்கள்!

Jeba Sri
Author: Jeba Sri