உழைப்பே உயர்வு 90

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30/04/2026

அதிகாலை உறக்கம் துறந்து,
அதே வேகம் களம் நுழைந்து
வியர்வையை நதியாய் கொண்டு
வையத்தை வாழ வைப்போர்.

வியர்வை நிலத்தில் விழும்போது
வறுமை ஒழிந்து போகிறது
தேய்ந்த காலணி சொல்லும்
நொந்து வந்த போராட்டச் சுவடுகள்

வளைந்து நிற்கும் முதுகுத் தண்டு
வரலாற்றைத் தாங்கும் தூண் இன்று
உழைப்பவர்கள் ஒன்று பட்டால்
உழைப்பே உயர்வு தரும்

உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள்
உறங்கிப் போனவர்கள் அல்ல…
உலகம் உறங்கும் வேளையிலும்
உழைப்பைத் தொடர்ந்தவர்கள்!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading