பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-276. தலைப்பு!
பருவம்
…………
பருவத்தில் பயிர்செய்
படித்திருப்போம் – நல்ல
பருவத்தில் மணமுடிக்க
மகிழ்ந்திருப்போம்!

காலத்தின் பருவத்தைக்
கணக்கெடுத்தார் – முன்னோர்
காலத்தால் அழியாத
சிலை வடித்தார்!

பருவத்தின் குறிப்பறிந்து
படையெடுத்தார் – வெற்றிப்
படைநடத்திப் பார்போற்றும்
புகழ்படைத்தார்!

ஆறுகளின் குறுக்கே
அணையமைத்தார் – பருவம்
அடைந்திட்ட காலத்தில்
விதைவிதைத்தார்!

பருவத்தின் சிறப்பினையே
அறியவேண்டும் – இளம்
பருவத்தில் வரலாற்றைப்
படிக்கவேண்டும்!

பருவத்தில் காய்கனிகள்
விளைக்கவேண்டும் – நாட்டில்
பல்லுயிரும் வாழ்ந்திடவே
உதவவேண்டும்!

பருவமழை வெள்ளத்தைத்
தடுக்கவேண்டும் – தண்ணீர்
பஞ்சமில்லா நிலையினையே
ஆக்கவேண்டும்!

ஈழத்தை மீட்டிடவே
துணியவேண்டும் – பருவம்
இனம்காக்க நல்வாய்ப்பாய்
மலரவேண்டும்!

– அபிராமி கவிதாசன்.
– 20.08.2024

Nada Mohan
Author: Nada Mohan