பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-284, தலைப்பு!

“ஆசான்”
……….
கற்றவற்றைக்
கற்பிக்கும் ஆசான்
கண்கண்ட
கடவுளென்றால் உண்மை!
குற்றமற்று-நீ வளர்வதற்கு ஆசான்சொல்
கேட்டால் வரும்
மேன்மை!

மாதாபிதா
குருதெய்வம்
என்பார்
மறக்காமல்
மதிப்பவரே
உய்வார்!
கல்விதரும்
ஆசானே
ஈசன்
அவர்கருத்தை
ஏற்கும் நீ
தாசன்!

வினாவென்றே
நீ போடு
தடை!
விரிவாகத்
தந்திடுவார்
விடை!
ஆசானின்
சொற்படி நீ
நடப்பாய்
அனைத்தையுமே
வென்றே நீ
முடிப்பாய்!

பாடங்கள்
படிப்பதற்கே
எழுவாய்
ஆசானடி
தொட்டுநீயும்
தொழுவாய்!
பாடசாலை
செல்வதற்குத்
துடிப்பாய்
ஆசான்சொல்
வார்த்தைகளைப்
பிடிப்பாய்!

ஆசானின்
கருத்துக்கிலை
மறுப்பு
கவனத்துடன்
நீ கேட்டால்
சிறப்பு!
மாசற்ற
ஆசானைப்
போற்று!
மறக்காமல்
அவருரையை
ஏற்று!

பெண்ணாக
ஆணாக
இருப்பார்
அவர்பேசும்
தெய்வமென
இனிப்பார்!

குற்றங்கள்
சுமத்துவதை
விடுப்பாய்
குருமார்கள்
யாவரையும்
மதிப்பாய்!

.தமிழ்ச்சங்க ஆசிரியர்.
.அபிராமி கவிதாசன்.
.22.10.2024

Nada Mohan
Author: Nada Mohan