திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அமைதியின் தூதுவன்

ரஜனி அன்ரன்

“ அமைதியின் தூதுவன் “….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 24.10.2024

இருளில் ஒளிவீசும் கலங்கரைவிளக்கு
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் தூதுவன்
உலகை வழி நடாத்தும் அமைதியின் நாயகன்
ஐக்கியத்தைப் பேணிடும் ஐக்கியன்
மனித குலத்தின் அறங்காவலனுக்கு
மகத்தான நாளாம் இன்று
ஐப்பசித் திங்கள் இருபத்தி நான்கு
ஐக்கிய நாடுகள் சபை தினமாம் !

உலகில் ஐக்கியத்தைப் பேண
அமைதியை அமுலாக்க
சமாதானத்தைச் சமரசமாக்க
பாதுகாப்பைப் பலப்படுத்த
பசி பட்டினியைப் போக்க
பேரிடர்களைப் போக்கி
மானிடரைக் காக்க
மகத்துவமாய் மலர்ந்ததே
ஐ.நா. சபையாம் அமைதியின் தூதுவன் !

வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பு
அமைதியின் தூதுவனையும்
ஆட்டம் காண வைக்குது
ஆங்காங்கே போர்களும் தான் வெடிக்குது
அமைதியெங்கும் நிலவட்டும்
ஐ.நா.வின் கொடி எங்கும் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading