பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

அமைதியின் தூதுவன்

ரஜனி அன்ரன்

“ அமைதியின் தூதுவன் “….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 24.10.2024

இருளில் ஒளிவீசும் கலங்கரைவிளக்கு
உலக நாடுகளை ஒன்றிணைக்கும் தூதுவன்
உலகை வழி நடாத்தும் அமைதியின் நாயகன்
ஐக்கியத்தைப் பேணிடும் ஐக்கியன்
மனித குலத்தின் அறங்காவலனுக்கு
மகத்தான நாளாம் இன்று
ஐப்பசித் திங்கள் இருபத்தி நான்கு
ஐக்கிய நாடுகள் சபை தினமாம் !

உலகில் ஐக்கியத்தைப் பேண
அமைதியை அமுலாக்க
சமாதானத்தைச் சமரசமாக்க
பாதுகாப்பைப் பலப்படுத்த
பசி பட்டினியைப் போக்க
பேரிடர்களைப் போக்கி
மானிடரைக் காக்க
மகத்துவமாய் மலர்ந்ததே
ஐ.நா. சபையாம் அமைதியின் தூதுவன் !

வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்பு
அமைதியின் தூதுவனையும்
ஆட்டம் காண வைக்குது
ஆங்காங்கே போர்களும் தான் வெடிக்குது
அமைதியெங்கும் நிலவட்டும்
ஐ.நா.வின் கொடி எங்கும் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan