“அறிவின் விருட்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல(428)

அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத் தோண்டியெடுத்து

ஆயிரமாயிரம் சிந்தனைகளை
எழுத்து வடிவமாக்கி
தனிமையும் தவிப்பும் நீக்கி
எம்மோடு உறவாடும் சொந்தமென

அறிவின் விருட்சமாய்
கைக்கெட்டு்ம் தூரத்தில்
தொட்டுத் தழுவி
கைகளில் தவழும் நூல்களின் வாசம்

தள்ளாத வயதிலும்
நம்முள் வளர்க்க வேண்டிய
தார்மீக தாகம்
வாசிப்பின் நேசம்

காகிதப் பூவில் தேனெடுப்போம்
உருசித்து இரசித்து சுவைப்போம்
அறிவோடு வாழ்வோம் வாழ்விப்போம்
புரிதலோடு புனிதமும் வளர்ப்போம்
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

Continue reading