“அறிவின் விருட்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல(428)

அறிவைத் தேடிய பயணத்திலே
அறிவூற்றுக் கருவாகி
மனக் கிடங்கில் புதைந்து கிடக்கும்
புதையல்களைத் தோண்டியெடுத்து

ஆயிரமாயிரம் சிந்தனைகளை
எழுத்து வடிவமாக்கி
தனிமையும் தவிப்பும் நீக்கி
எம்மோடு உறவாடும் சொந்தமென

அறிவின் விருட்சமாய்
கைக்கெட்டு்ம் தூரத்தில்
தொட்டுத் தழுவி
கைகளில் தவழும் நூல்களின் வாசம்

தள்ளாத வயதிலும்
நம்முள் வளர்க்க வேண்டிய
தார்மீக தாகம்
வாசிப்பின் நேசம்

காகிதப் பூவில் தேனெடுப்போம்
உருசித்து இரசித்து சுவைப்போம்
அறிவோடு வாழ்வோம் வாழ்விப்போம்
புரிதலோடு புனிதமும் வளர்ப்போம்
நன்றி…….

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading