“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

அலை

ஜெயம்
தொடக்கமும் தெரியாது முடிவும் தெரியாது
அடங்காது பொங்கும் ஓய்வும் அறியாது
அலையின்அலைவும் பார்த்திடஅழகு
தலைவிரித்தாடினால் தாங்காது இந்தஉலகு

விரிகுடா வளைகுடா எங்கும் இதனாட்சி
திரிந்தாலும் ஆர்ப்பாரித்து அழகின் காட்சி
அலையுச்சி வகிடெடுக்கும் வெண்ணிலவே சாட்சி
கலைகளாக அலைகளை வரைந்திட்ட மாட்சி

கரையினை அடைந்து தீர்த்திவிட தாகம்
விரைந்துமே கொடுத்திடும் முத்தத்தின் வேகம்
அப்பப்பா காதலைச்சொல்ல கரைதாண்டும் தன்மை
இப்போது தரைக்கு தெரிந்தது உண்மை

அலைகளை பார்க்க பார்க்க ஆனந்தம்
நிலையான கவலையை தீர்த்திடும் அற்புதம்
கடற்கரையோரத்தில் நுரைதள்ளி அலை திரும்பிடும்போது
படைத்திட கவிதையை தட்டுப்பாடும் ஏது

Nada Mohan
Author: Nada Mohan