அலை.

வசந்தா ஜெகதீசன்
அலை…
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை மோதியே மீளுமே அன்றைய தேக்கம்
அனுதினம் அலையாய் மோதிடும் பாரம்
அலைந்திட்ட ரணங்களை அம்பென எய்யும்

போரின் அலைகள் புறமிட்ட சரிதம்
போக்கிடமின்றியே புகலிடச் சுவாசம்
அலையென திரண்டோம்
அன்னை மண்விட்டு அவதியில் வீழ்ந்தோம்
அலையது கரை வந்து கடலுக்குள் மீளும்
அலைந்திடும் மனிதமோ அவனியின் அகதி
அலையென மனமோ குமுறிடும் நியதி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading