“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

அலை.

வசந்தா ஜெகதீசன்
அலை…
அலை அலையாக அணிதிரள் கூட்டம்
அகதியாய் ஒடிய அலைவின் ஏக்கம் அலை மோதியே மீளுமே அன்றைய தேக்கம்
அனுதினம் அலையாய் மோதிடும் பாரம்
அலைந்திட்ட ரணங்களை அம்பென எய்யும்

போரின் அலைகள் புறமிட்ட சரிதம்
போக்கிடமின்றியே புகலிடச் சுவாசம்
அலையென திரண்டோம்
அன்னை மண்விட்டு அவதியில் வீழ்ந்தோம்
அலையது கரை வந்து கடலுக்குள் மீளும்
அலைந்திடும் மனிதமோ அவனியின் அகதி
அலையென மனமோ குமுறிடும் நியதி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan