கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ஆட்டம் காட்டும் ஆகாய விமானம்

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1988..

ஆட்டம் காட்டும்
ஆகாய விமானம்…!

விஞ்ஞான விந்தை சிந்தை
விரிக்க
சிறகு விரித்துப் பறக்குதே
ஆகாயத்தில்
அழகாய் உடலில் நம்மைத்
தாங்கி
உயரப் பறக்கும் ஊர்க்குருவி
அல்ல
இது உயர்ந்த பேருதவி…!

நாடு விட்டு நாடு தாண்டும்
மக்காள்
கண்டம் விட்டுக் கடலும்
தாண்டுவரே
விரைந்த சேவை தொலையும்
காசும்
விமானப் பயணத்தை விரும்பி
ஏற்பார்..!

அண்மைக் காலம் அடுக்கடுக்காய்
குலுங்கும் தன்மை குவலயம்
அறியும்
இறப்பின் வேளை தொட்டே வந்த
இவர்கள்
மரண பயத்தைக் கண்டு
மீண்டனர்
மீண்டும் பயணத்தை நாடியும்
செல்லுவார்..!
சிவதர்சனி இராகவன்
29:5/2024

Nada Mohan
Author: Nada Mohan