ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு

ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி

ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்

கவலைகள் பறக்க காதல் நினைவு

அலையாய் அடிக்கும் அகத்தின் துடிப்பு

சிலையாய் அவளும் வீற்றுமே இருப்பாள்

தாமரை அழகினைக் கண்டுமே இரசிப்பாள்

மீன்கள் துள்ளவே நீரும் துள்ளுமே

அள்ளிக் கொள்ளும் மனசில் நானும்

ஆத்தங்கரை ஓரத்துல அத்த பொண்ணு

அங்கலாய்த்து இருக்கையிலே அவசரமாய் போகணுமே..

சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading