மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

இதுதான் எது அதுதான் இது

ஜெயம் தங்கராஜா

கவிதை 763

இதுதான் எது அதுதான் இது

அறிவிக்காமலே வந்துவிடும்
உண்ணவென விருந்து
தீரா நோய்களின் கவலைகளை தீர்த்துவைக்கும் மருந்து இறைவனாயில்லை இருந்தாலும் ஏனோ பயமுண்டு
நெருங்கவிடாது இதை பார்த்தலே மகிழ்வுண்டு

வீடுவீடாக தரிசிப்பது போகாத வீடுகளேயில்லை
தன்னை நினைக்கவைத்து நிம்மதியை குலைக்குமிது
உருவம் இதற்கில்லை உருவங்களைப் பிடிக்காது
இதன் செயலாலே கடவுளுக்கும் இழுக்குண்டு

யாருக்கும் இதனாலே பலனெதுவும் கிடையாது
பணங்கொடுத்தால் போகுமென்றால் அதுவுங்கூட முடியாது
இயற்கையானதா செயற்கையானதா இன்றுவரை புரியவில்லை
இரசனையில்லாதது மட்டுமல்ல உறவையறியாது என்று
அதிகமானோர் வருந்துகின்றார் அனுபவத்தைக் கொண்டு

இதை கடந்துவிட்டுப் போகவே திட்டம்
இருந்தாலும் வலிந்துமே தானாகவே முட்டும்
வேட்டையாடி சந்தோசிக்கும் வேடனின் காட்டம்
மாற்றமொன்றை காட்டவரும் விழியறியா தோற்றம்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் அருக்காமையிலேயே உண்டு
ஒருவருக்காக ஒருவர் செய்யமுடியாத ஒன்று
ஓடுகின்றோம் முன்னாலே சேர்ந்தே ஓடுகின்றது
வாழ்க்கை அற்புதமானதாகும் இதனை தவிர்த்தால்

பாயை சுருட்டும் செய்த பாவப்பொருளோ
அதிஷ்டம் இல்லா மானிடர் நிகழ்வோ
புகழென்ன பெயரென்ன தொடர்வதுவும் இதனாலே
எங்குமே எதிர்பார்க்க வைத்துவிடும் புதிர்தானே

ஜெயம்
27-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading