பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

இதெல்லாம் இப்போ எங்கே ?

ரஜனி அன்ரன்

“ இதெல்லாம் இப்போ எங்கே ? கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.12.2024

உலகம் முழுவதும்
உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்குது
எங்கே எங்கே மனித உரிமையென்று
எங்கும் தேடி அலையுது
மனித உரிமை மீறல்களே
மன்னுலகை ஆளுது
அன்பு சமத்துவம் நீதியெல்லாம்
அறவே செத்துப் போச்சுது !

மூன்றாம் உலக யுத்தமொன்று
முழுமூச்சாய் தொடருது
மொத்த உலகும் கூடி நின்று
வேடிக்கை தான் பார்க்குது
கொலையும் களவும் பொய்யும் புரட்டும்
மலிந்து தான் போச்சுது
நீதிதேவதையோ மண்டியிட்டுக் கிடக்குது
அநீதிகள் தான் தலைவிரித்து ஆடுது !

அன்பில்லை பாசமில்லை பந்தமில்லை இப்போ
அத்தனையும் வேசம் தான் இப்போ
மதமென்றும் பேதமென்றும்
மானிடமே அலையுது
மனிதஉரிமை என்ற பெயரில் – இப்போ
புதிய யுகமொன்றைத் தேடுது !

Nada Mohan
Author: Nada Mohan