மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இனியவை

நகுலா சிவநாதன்

இனியவை

காலையில் எழுவது கனிவென நாளும்
மாலையில் மகிழ்வுடன் உரைப்பது நலமே
வேளைகள் தோறும் தேடல்கள் சிறப்பே
வேண்டும் இறையைத் தொழுவது நலமே!

முயற்சிகள் கொண்டு வாழ்வது நன்றே
முயன்று வெல்வது காலத்தின் கனிவே
அயராத உழைப்பே அவனியில் சிறப்பபே!
ஆன்றோர் உரைத்த முதுமொழி நன்றே!

தோல்விகள் இன்றி வெற்றிகள் இல்லை
தேர்வுகள் இன்றி பெறுபேறு இல்லை
வாரிகள் நிறைய வளங்கள் நிறையும்
வாரிசு வாழ அன்பே வேண்டும்

நகுலா சிவநாதன் 1839

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading