இனிவரும் காலம்..

வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்—
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய் ஆகிடும்
வன்மம் பெருகிடும் வாஞ்சை மறைந்திடும்
அன்பும் பாசமும் அடியோடு அகன்றிடும்
இன்பம் இருண்டிடும் துன்பம் துலங்கிடும்
தொடர்பாடல் குன்றிடும் உறவு மறைந்திடும்
உலகம் சுருங்கிடும் இனிவரும் காலம்
இனிக்குமா? இருளுமா?
காலத்தின் தோழனாய் கைத்தொலைபேசி
நேரத்தைப் போக்கிடும் நியாயத்தின் வாதி
தூரமே நேசமாய் பாசங்கள் வேசமாய்
துலங்கிடும் காட்சியில் மனிதங்கள் தொலையுது
நாட்களை புதைக்குது நட்பினைச் சிதைக்குது
தேடலை தேக்கியே தேவையைப் பெருக்குது
நன்றும் தீதும் உள்ளதை உராய்ந்து நம்மை நாமே புடமிடல் நன்றே!
நன்றி 10.11.25

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading