11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
ஏறு போல் நட
———————
கூரிய கண்ணில் கர்வம் கொண்டே
நேரிய அவன்சொல் நன்நெறி காக்கும்
வீரியமாய் நெஞ்சும் வளையாத பாங்கும்
பேரினைச் சொல்லும் பேராளன் காளையென்று
அறமதைப் பேணும் ஆடவனாய் நற்றலைவன்
மறமதைப் புரிந்து மரித்திடத் துணிவுடன்
புறமதில் குத்தாத போர்வாழ் கொண்டே
இறப்புடன் வீரன் இறவா வரத்துடனே
நற்பண்பு கொண்டே நாணிலம் போற்றிட
கற்பாக ஏற்றுக் காத்திடும் அரசன்
பற்றாளன் என்றே பறைசாற்றி நிற்கும்
விற்பன்ணன் ஏறுபோல் வையத்தில் வாழ்வான்.
இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.