இரா.விஜயகௌரி

இரா.விஜயகௌரி

பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம் வாழ்வெழுதி

சரியெது பிழையெது யாரறிவார்
சூழலைச் சார்ந்தே விதிமுறைகள்
சூத்திரப் பொறிமுறை வரைவோர்கள்
பந்தியில் முந்தி படம் வரைவார்

நாளை என்பது நமதென்றால்
எண்ணிய யாவும் நிறைத்திடலாம்
நிலைத்திடும் கணத்தை நிலைப்பிடவே
முடியா மாந்தர்கள் வாழ்வின் நிலை

இற்றைக் கணமே உனதென்றால்
சட்டென முடிந்தவை செயல் கொள்வாய்
வாழ்வைத் தொலைத்து வனப்பெழுதும்
கனவுப்பயணம் நீளமில்லை

புரிந்தால் தெரிந்தவை தெரிவிலிட்டு
தேறிய பொழுதினை பயனெழுது

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading