இரா.விஜயகௌரி

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்……..

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகளால்
கரையும் வாழ் பொழுதை
உரைக்காதோ வாய்மொழிதாம்

உறைக்கப் பேசுங்கள்
உணரச் செயல் தொடுங்கள்
உரைக்கும் மொழி தன்னால்
கரையட்டும் கழிவின் நெடி

நீர்வளத்தைக் கழிவாக்கி. அங்கு
கழிமுகத்தை வளமழித்து. நாம்
நிதச்செயலால். சுரண்டுகிறோம்
நிர்மலத்தை அழிப்பவர் நாம்

குழந்தைக்கும் செயல் மூலம்
வாழ்நிலையை உணர்த்தி எழின்
பூமிமகள் செழிப்பெழுத -நாம்
உயிர் கொடுக்கும் வரம் அமைப்போம்

நிறையட்டும் பெருவளநீர்
குறையட்டும். கழிவின் நிறை
வளமுள்ள பூமித்தாய்
இயற்கையெழில் சொரியட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading