மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

இருபக்க வாழ்க்கை

ஜெயம்

சொர்க்கத்தை கருத்தரி சுகங்களை பிரச்சவிக்கின்றது
சுமைகளையும் மறைத்துவைத்து தலையிலே ஏத்துகின்றது
புன்னகையை பூக்கவைத்து வாசத்தை வீசுகின்றது
அழுகையையும் வரவழைத்து விழிகளை குளமாக்குகின்றது

வசந்தங்களை வரவழைத்து கொண்டாட வைக்கின்றது
வருத்தங்களை நுழைத்து திண்டாடவும் செய்கின்றது
நாட்களை சோலையாக்கி வனப்பை சேர்க்கின்றது
முள்ளாகி தைத்துவிட்டு வேடிக்கையும் பார்க்கின்றது

வெற்றியை வசப்படுத்தி துள்ளாட்டம் போடுகின்றது
தோல்வியால் அடிபட்டு துவண்டு வாடுகின்றது
நல்லதாய் அமைத்துகொண்டு சாத்தியமாய் இருக்கின்றது
பொல்லாததை பகிர்ந்துவிட்டு விதியை சாட்டுகின்றது

பிறப்பும் இறப்பும் எழுதப்பட்ட புத்தகம்
மிகுதி பக்கங்களை நிரப்புவதே எம்பணி
வாழ்ந்த பிறகல்ல வாழும்போதே எழுதுவது
மனக்கிறுக்கல்களில் பக்கம் பக்கமாக நிறைகின்றது

Nada Mohan
Author: Nada Mohan