புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

இளவேனில் மங்கை

“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024

வசந்தமெனும் இளவேனில்
சுகந்தம் தரும் காலமிது
வாடையும் மெல்ல விலகிட
வசந்தமும் கூடி வந்திட
சாரலும் மெல்ல வீசிட
வந்துவிட்டாள் இளவேனில் மங்கையும் !

ஆடையவிழ்த்த தருக்களில்
அரும்புகள் மெல்லத் துளிர்த்திட
பசுமை எங்கும் கொழிக்குமே
பச்சை ஆடை பூணுமே
இச்சை கொள்ள வைக்குமே
இயற்கையும் அழகில் ஜொலிக்குமே !

பகலவனும் பட்டொளியை வீசிட
பனியும் மெல்ல அகன்றிட
பார்க்கும் இடமெல்லாம்
கண்ணிற்கு விருந்தாகுமே
மொட்டுக்கள் மெல்ல முகையவுக்க
சிட்டுக்கள் எல்லாம் சிறகடித்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்திட
இளவேனில் மங்கையும் நாணிடுவாளே !

Nada Mohan
Author: Nada Mohan

வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

Continue reading