இ.உருத்திரேஸ்வரன்

உன் நினைவுகள்

முப்பத்தைந்து வருடங்கள் ஓடியதோ
உணவு நீரின்றி பன்னிரண்டு தினங்கள்
நன் நோக்குடன் செய்த தியாகம்
வீணானதோ என வினா வந்ததே

இல்லை எனக் கூறும் அரசியல் கட்சிகள்
உன் நினைவு நாளை வைத்து அடிபட
உன் நல்நோக்கம் அதற்காகவா
என மக்களின் சிந்தனை

மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என
உறுதியாக நம்பிக்கை கொண்டாயே
இன்றோ எம்மினம் அப்பற்றின்றி
தங்களுக்குள் போராடும் என நினைத்தாயோ

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading