இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 206
வழிகாட்டிகள்

இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள்
கல்விக்கு ஆசான் வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
துணிச்சல் நல்ல வழிகாட்டி

வீதியில் நல்ல வழிகாட்டிகள்
விபத்தை விலக்கும் குறியீடு
பாதை தேடும் படகோடிக்கு
நட்சத்திரங்கள் வழிகாட்டி

சிறுவர் இளையோருக்கு வழிகாட்டி
வாணி நடாமோகனின் பாமுகம்
வாழ்வு தந்த அனுபவம்
வாழ்நாள் முடிவில் வழிகாட்டி
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading