இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 189
முதியோர் வாழ்க்கை

உடலிற்கு தந்த முதுமை
மனதிற்கு இல்லையே அது
அதனால் உற்சாகத்துடன் வாழ
தந்த இறைவனுக்கு நன்றி

மனைவியின் காவலன் இளமையில்
கணவனின் ஊன்றுகோல் முதுமையில்
தாங்கிப் பிடிக்க துணை இருந்தால்
தள்ளாடும் முதுமையும் இளமையே

எந்த உயரினத்துக்கும் உண்டே முதுமை
அதையிட்டு கவலைப்படுவது ஏனோ
மானிடனே வேண்டாம் உன் கவலைகளை
தூர எறிந்து விட்டு போடு வீரநடை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading