“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே!

நகுலா சிவநாதன்

உதிர்கின்ற இலைகளே!

உதிர்கின்ற இலைகளே
ஒருகணம் நில்லுங்கள்
பதிக்கின்ற உன் மரத்தாலே
பாரே பெருமை பெறுகிறது.

வாழ்க்கை என்றால்
வளமும் இருக்கும்
வடிவங்களும் மாறும்
வீழ்கை என்றால் விதியும் மாறும்
வீழ்ச்சியும் வரும்

வண்ணமாய் நீ வாழ
வரலாறாய் பலஆண்டுகள்
ஒற்றைவரியில் கற்றுக்கொள்ள
ஆயிரம் பாடம் உன்மேல்
உள்ளதே!
விழுகை வாழ்வுக்கு வழி
எழுகை உயர்வுக்கு வழி
வீழ்ந்து கிடாதே எழுந்து நட
சூழ்ந்து வரும் துயரும்
ஒருநாள் சென்றுவிடும்

நகுலா சிவநாதன் 1782

Nada Mohan
Author: Nada Mohan