உதிர்கின்ற இலைகளே!

நகுலா சிவநாதன்

உதிர்கின்ற இலைகளே!

உதிர்கின்ற இலைகளே
ஒருகணம் நில்லுங்கள்
பதிக்கின்ற உன் மரத்தாலே
பாரே பெருமை பெறுகிறது.

வாழ்க்கை என்றால்
வளமும் இருக்கும்
வடிவங்களும் மாறும்
வீழ்கை என்றால் விதியும் மாறும்
வீழ்ச்சியும் வரும்

வண்ணமாய் நீ வாழ
வரலாறாய் பலஆண்டுகள்
ஒற்றைவரியில் கற்றுக்கொள்ள
ஆயிரம் பாடம் உன்மேல்
உள்ளதே!
விழுகை வாழ்வுக்கு வழி
எழுகை உயர்வுக்கு வழி
வீழ்ந்து கிடாதே எழுந்து நட
சூழ்ந்து வரும் துயரும்
ஒருநாள் சென்றுவிடும்

நகுலா சிவநாதன் 1782

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading