உனக்குள் ஒரு புது விடியல்

நகுலா சிவநாதன்

உனக்குள் ஒரு புது விடியல்

உன்றன் விடியல் உள்ளத்தில்
உணர்வாய் என்றும் துடிக்கட்டும்!
இன்பம் எழுதும் எழுதுகோலாய்
இறைவன் பாதம் தொடரட்டும்
வென்றே ஒளிரும் அறிவொளியாய்!
வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்!
நன்றே படைக்கும் இன்றமிழால்
நாளும் புதுமை பூக்கட்டும்!

உலகம் போற்றும் புதுவிடியல்
உனக்குள் பரவ முனைந்திடுவாய்!
நலமே போற்றும் நற்றிறனும்
நனவாய் ஆக உழைத்திடுவாய்!
திலகம் போலே மதிப்புடனே
திகழ என்றும் செயற்படுவாய்!
குலமே போற்றும் நல்வாழ்வு
குவியப் பாடு படுவாயே!

நகுலா சிவநாதன் 1762

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading