” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

உனக்குள் ஒரு புது விடியல்

நகுலா சிவநாதன்

உனக்குள் ஒரு புது விடியல்

உன்றன் விடியல் உள்ளத்தில்
உணர்வாய் என்றும் துடிக்கட்டும்!
இன்பம் எழுதும் எழுதுகோலாய்
இறைவன் பாதம் தொடரட்டும்
வென்றே ஒளிரும் அறிவொளியாய்!
வெற்றி வாழ்வில் ஒளிரட்டும்!
நன்றே படைக்கும் இன்றமிழால்
நாளும் புதுமை பூக்கட்டும்!

உலகம் போற்றும் புதுவிடியல்
உனக்குள் பரவ முனைந்திடுவாய்!
நலமே போற்றும் நற்றிறனும்
நனவாய் ஆக உழைத்திடுவாய்!
திலகம் போலே மதிப்புடனே
திகழ என்றும் செயற்படுவாய்!
குலமே போற்றும் நல்வாழ்வு
குவியப் பாடு படுவாயே!

நகுலா சிவநாதன் 1762

Nada Mohan
Author: Nada Mohan