” உலகப்பெருவிழா “

ரஜனி அன்ரன்

“ உலகப்பெருவிழா “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 01.08.2024

உலகப் பொதுவிழா உன்னதப் பெருவிழா
ஒற்றுமையின் ஒருவிழா ஒலிம்பிக் திருவிழா
அழகிய பாரிஸ் நகரினில்
ஈபிள் கோபுர முன்றலில்
செயின் நதியோரத்தில்
அலங்காரங்களும் கண்ணைப் பறிக்க
மக்கள் வெள்ளம் அலைமோத
ஒலிம்பிக் திருவிழா களைகட்டுகிறதே !

உயரம் தாண்டி வேகம் தொட்டோடி
உலகமே ஒன்றுகூடி கொண்டாடும் திருவிழா
ஒலிம்பிக் என்ற பெயரில் பிறக்கும் ஒளி
ஒற்றுமைக்கும் நட்பிற்கும் அடையாளமாகி
உலக நாடுகளின் கனவான பேரொளி
விளையாட்டுக்களும் பற்பல வீரர்களும் பற்பல
வியர்வை சிந்தி வெற்றி கொள்ளும் களமிது !

கண்டங்கள் ஐந்துமிணைந்து வளையங்கள் ஐந்தாகி
அண்டத்தில் ஒன்றோடு ஒன்று கைகோர்க்கும் அழகு
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒற்றுமையின் சிறப்பே
வேகம் உயரம் வலிமையெனும்
வேத வாக்கை மந்திரமாக்கி
வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் ஒருங்கிணைய
விளையாடும் களமிது வீரம் பொங்கும் களமிது
மனிதநேயமெனும் கொடி எங்கும் உயரப் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading