” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

” உலகப்பெருவிழா “

ரஜனி அன்ரன்

“ உலகப்பெருவிழா “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 01.08.2024

உலகப் பொதுவிழா உன்னதப் பெருவிழா
ஒற்றுமையின் ஒருவிழா ஒலிம்பிக் திருவிழா
அழகிய பாரிஸ் நகரினில்
ஈபிள் கோபுர முன்றலில்
செயின் நதியோரத்தில்
அலங்காரங்களும் கண்ணைப் பறிக்க
மக்கள் வெள்ளம் அலைமோத
ஒலிம்பிக் திருவிழா களைகட்டுகிறதே !

உயரம் தாண்டி வேகம் தொட்டோடி
உலகமே ஒன்றுகூடி கொண்டாடும் திருவிழா
ஒலிம்பிக் என்ற பெயரில் பிறக்கும் ஒளி
ஒற்றுமைக்கும் நட்பிற்கும் அடையாளமாகி
உலக நாடுகளின் கனவான பேரொளி
விளையாட்டுக்களும் பற்பல வீரர்களும் பற்பல
வியர்வை சிந்தி வெற்றி கொள்ளும் களமிது !

கண்டங்கள் ஐந்துமிணைந்து வளையங்கள் ஐந்தாகி
அண்டத்தில் ஒன்றோடு ஒன்று கைகோர்க்கும் அழகு
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒற்றுமையின் சிறப்பே
வேகம் உயரம் வலிமையெனும்
வேத வாக்கை மந்திரமாக்கி
வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் ஒருங்கிணைய
விளையாடும் களமிது வீரம் பொங்கும் களமிது
மனிதநேயமெனும் கொடி எங்கும் உயரப் பறக்கட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan