சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உள்ளமதில் ஏற்றிடுவாய்

சிவருபன் சர்வேஸ்வரி

உள்ளமதில் ஏற்றிடுவாய்

காலம் உறங்காது கடமை ஓயாது/
சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ//
எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்//

வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா//

கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா
காசினியை உணர்ந்துவிடுவாய்//

சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்//
வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_

பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_

பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்//

வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்//

துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்//

எடுப்பாய் நேர்வழியில்
தொடுப்பாய் பயணத்தை//

விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே//

தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று//

உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில்
ஏற்றிடுவாய்//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan