மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

உள்ளமதில் ஏற்றிடுவாய்

சிவருபன் சர்வேஸ்வரி

உள்ளமதில் ஏற்றிடுவாய்

காலம் உறங்காது கடமை ஓயாது/
சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ//
எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்//

வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா//

கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா
காசினியை உணர்ந்துவிடுவாய்//

சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்//
வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_

பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_

பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்//

வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்//

துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்//

எடுப்பாய் நேர்வழியில்
தொடுப்பாய் பயணத்தை//

விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே//

தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று//

உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில்
ஏற்றிடுவாய்//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading