பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

உள்ளமதில் ஏற்றிடுவாய்

சிவருபன் சர்வேஸ்வரி

உள்ளமதில் ஏற்றிடுவாய்

காலம் உறங்காது கடமை ஓயாது/
சாலம் தேவையில்லை சாதிக்கவேண்டும் எத்தனையோ//
எண்ணத்திலே பாத்திகட்டி ஏதுமே செய்யாமல்//

வண்ணத்திரை போட்டால் வகையும் அறியலாமா//

கண்ணைமூடிக் கனவுகாணும் மானிடா
காசினியை உணர்ந்துவிடுவாய்//

சீரியகுணம் வேண்டும் செய்வதைச் சொல்லவேண்டும்//
வாரியே அணைத்திடுவாய் வழுவாத விழுமியத்தை/_

பாருமோ சிறந்திடவே பண்புடன் நடந்திடுவாய்/_

பகுத்தறிவுடனே பார்ப்பாய் பாங்காய் மிளிரவும்//

வகுப்பாய் நன்னெறிதனையும் வரிப்பாயே மனதிலென்றும்//

துடுப்பாய் பயன்படுவாய் துரிதமும் கொண்டிடுவாய்//

எடுப்பாய் நேர்வழியில்
தொடுப்பாய் பயணத்தை//

விடுப்பாய் எண்ணிவிடு நல்லெண்ணம் கூடிடவே//

தடுப்பாய் அதர்மங்களை தர்மமே வெல்லுமென்று//

உண்மையைச் சொல்லுகின்றேன் உள்ளமதில்
ஏற்றிடுவாய்//
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading