ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

ஒளிமயமான எதிர்காலம் ஒளிர்ந்துமே துலங்கிடவும்
வழியது மேவிட வார்த்தையும் இலங்கிட
கனிந்திடும் இன்பம் கவலைகளைப் போக்கவும்
விளித்து விளம்பிட விண்கூவி நின்றிட

இனித்த பிறவி எடுத்தபயன் அறிந்திட
கனிந்தநல் மனதில் கருணையும் கூடிட
பனித்துளி போன்றே எம்பாவும் தெளித்திட
திணித்திடும் திகழமுதம் தித்திப்பாய் இனித்திட

அவைக்கு ஓர்விருந்து அமுதமாய் பொழிந்திட
சுவைக்கு நல்மருந்தாய் தூய்மையும் அடைந்திட
நகைச்சுவை கொடுத்து மகிழ்விக்க வேண்டும்
அகமதிலென்றும் அறத்தின் வழியே ஏகுவோம்
இகமதில் ஒளிமயமான எதிர்காலம் துலங்கட்டும்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

Continue reading

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading