பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

“ஒளியிலே தெரிவது”

நேவிஸ் பிலிப் கவி இல(356) 14/11/24

ஒளி கண்டு மொட்டுக்கள் மலர்கின்றன
தாவரங்கள் உணவு பெறுகின்றன
கண்கள் பொருள் காண்கின்றன
உயிர்கள் நிறைவடைகின்றன

ஒற்றை நிலாவும் உதிக்கும் கதிரவனும்
இருளகற்றும் ஒளி விளக்குகள்
இயலாமை எஎன்னும் இருள் நீக்கி
அறிவொளி பரப்பிடும் சுடர் விளக்கு

ஆன்மீக வெளிச்சத்திற்கோர்
முறை விளக்கு ,சான்றோர்க்கு
நல்வழி காட்டிடும் நெறி விளக்கு
பாதைக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு

குன்றின் மேல் எற்றி வைத்த தீபமென
அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
தியாக தீபங்களாம் மாவீரர்

பனி விழும் மலர்வனம் அங்கே
நீத்தாரின் உறைவிடங்கள்
கல்லறைகளில் ஏற்றி வைத்த
தீபங்களின் ஒளியினிலே
அருட் பெரும் சோதியாய்
ஒளியில் தெரிவது யாரோ..???

Nada Mohan
Author: Nada Mohan