சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ஓ கார்த்திகையே!

நகுலா சிவநாதன்
ஓ கார்த்திகையே!

பனித்துளி புவியை நிரப்பிட
தனித்துளியாய் பாரை நிறைத்திடும்
கார்த்திகை திங்களே!

காரிருள் வானில் படர
கண்களில் குளிர்வு பெருக
மண்ணிலே மலரும் கார்த்திகைப்பூவே!
பூத்திருக்கிறாய் புனிதம் மேவ!

முருகன் புகழ்பாடும் கார்த்திகை
எங்கள் புனிதர் புகழ்பாடும் மாதமே
கார்த்திகை பூத்தாய் காரிருள் களைந்தாய்
நேர்த்தியாய் உன் கடமை ஆற்றுகிறாய்

ஓ கார்த்திகையே பூக்கிறாயா?
சாரல் மழையிலும் சாதிக்க துடிக்கிறோம்
மடிந்தவர்கள் வரவில்லை
விடியும் பொழுதுகளை கேட்கிறோம்
விந்தை உலகே விடிவு தருவாயா?
ஓ கார்த்திகையே பூக்கிறாயா?

நகுலா சிவநாதன் 1830

Author: