ஔவை

மீண்டெழு………
================
மனதினில் நிகழ்ந்திடும் வெறுப்புகள் விலகிட
மனத்திடம் கருதியே நெருப்பென மீண்டெழு

உனக்குளே உறைகிற நினைவுகள் சுகந்தர
உறவுகள் உறுதியில் நெருப்பென மீண்டெழு

கனவுகள் கலைந்திடா மலர்கிற வழிகளில்
கவிதனில் மிளிர்ந்திட நெருப்பென மீண்டெழு

சினந்திடும் மனிதரைச் சிதைத்திடும் வகையினில்
சிறுத்தையாய் பகையுடன் நெருப்பென மீண்டெழு .

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading