11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
ஔவை
இதயம்
=======
அன்பின் வடிவாய்
அகிலத்தில் நீயே
இன்ப ஊற்றின்
இடமும் நீயே
துன்ப வலியின்
துடிப்பும் நீயே
அன்றாட இயக்கம்
அனைத்தும் நீயே
காதலின் சின்னமாய்க்
காட்சியில் நீயே
சாதலின் முடிவில்
சான்றும் நீயே
ஈதலும் இதயம்
இளகினால் தானே
நீதரும் இடமே
நிரந்தரம் அன்றோ
உணர்வை உணரும்
உறுப்பும் நீயே
குணத்தைக் காட்டும்
கருவியும் நீயே
முகத்தில் ஒளியாய்
மலர்வதும் நீயே
அகத்தில் இருந்து
ஆள்வதும் நீயே
உயிரின் மூலமும்
உனது துடிப்பே
உயிர்கள் அன்பும்
உந்தன் வழியே
ஆயிரம் உறவுகள்
அன்றாடம் வரவே
ஆயினும் உன்னை
அறிபவர் சிலரே.
ஒளவை.
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...