திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஔவை

இதயம்
=======

அன்பின் வடிவாய்
அகிலத்தில் நீயே
இன்ப ஊற்றின்
இடமும் நீயே
துன்ப வலியின்
துடிப்பும் நீயே
அன்றாட இயக்கம்
அனைத்தும் நீயே

காதலின் சின்னமாய்க்
காட்சியில் நீயே
சாதலின் முடிவில்
சான்றும் நீயே
ஈதலும் இதயம்
இளகினால் தானே
நீதரும் இடமே
நிரந்தரம் அன்றோ

உணர்வை உணரும்
உறுப்பும் நீயே
குணத்தைக் காட்டும்
கருவியும் நீயே
முகத்தில் ஒளியாய்
மலர்வதும் நீயே
அகத்தில் இருந்து
ஆள்வதும் நீயே

உயிரின் மூலமும்
உனது துடிப்பே
உயிர்கள் அன்பும்
உந்தன் வழியே
ஆயிரம் உறவுகள்
அன்றாடம் வரவே
ஆயினும் உன்னை
அறிபவர் சிலரே.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading