அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ஔவை

பெளர்ணமி இரவில்….
=====================

வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு
வானமதில் கதைபலதை உரைக்கும் -அது
வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும்

கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க
காதலது கண்சிமிட்டி அழைக்கும் – மனம்
காட்சிகளைக் கவியெழுத நினைக்கும்.

சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும்
சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில்
சேதிபல உள்மனதில் இருக்கும்

நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள்
நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது
நானிலத்தில் விடிவுகளை நோக்கும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading