“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஔவை

பெளர்ணமி இரவில்….
=====================

வெட்ட வெளியிலொரு வட்ட முழுநிலவு
வானமதில் கதைபலதை உரைக்கும் -அது
வாழ்வுதனில் கனவுகளை நிறைக்கும்

கொட்டும் பனியிரவில் பட்டு உடல்நடுங்க
காதலது கண்சிமிட்டி அழைக்கும் – மனம்
காட்சிகளைக் கவியெழுத நினைக்கும்.

சிட்டுக் குயிலிரண்டு தொட்டுக் குலவிடவும்
சோலைமரம் தன்நிலையை மறக்கும் -அதில்
சேதிபல உள்மனதில் இருக்கும்

நட்ட நடுநிசியில் இட்ட கவி வரிகள்
நாளையதில் இனியவைகள் சேர்க்கும் -அது
நானிலத்தில் விடிவுகளை நோக்கும்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan