திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கஞ்சா

ராணி சம்பந்தர்

04.07.24
ஆக்கம் 323
கஞ்சா

கூழ்க் கஞ்சி குடித்து
ஆளாக நிமிர்ந்தவன் பாதை பாழ்பட்ட கஞ்சா
போதை வீழ மாய்ந்து மூழ்கடித்ததே

தேள் கொட்டியது போல
கொஞ்சங் கொஞ்சமாக
நஞ்சு கலந்த வஞ்சகர் ட
வலையில் அஞ்சாது
புகுந்து தாறுமாறாய்ச்
சூழடித்ததே

செஞ்ச பாவம் துரத்திப்
பிடித்து பஞ்சமா பாதகங்கள் கரைச்சுக்
குடித்து அந்நிய கலாச்சாரம் வெடித்து
தமிழன் சந்ததி நெஞ்சம்
முற்றாய் மறந்ததே

கஞ்சா அடிச்சு அடிச்சு
பஞ்சணையில் சுகமேற
போதை ஊசி ஏற்றி ஏற்றி ஆளின் உயிர்
குடிச்ச சாம்பல் வெடிச்சு
வெடிச்சுப் பஞ்சாகப்
பறக்குதே உலகெங்கும்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading