திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கஞ்சா

சிவருபன் சர்வேஸ்வரி

கஞ்சா

காலம் நகர்கின்றது கவலைகள் பிறக்கின்றது
வாழ்வுகள் மலருமென்று மனதிலே உறுதியொன்று
தாழ்வுகள் தேடிவரத் தாய்மனமும் வாடிநிற்க
தேடும் குழந்தைகள் இன்றென்ன கஞ்சா

கஞ்சா கஞ்சா காசினியெங்கும் கஞ்சா
நஞ்சாக வருமென்று கனவிலும் நினையாமல் கஞ்சா
கஞ்சாவும் இல்லையென்றால் வாழ்வும் இல்லையென்பார்
துஞ்சித்து நிற்கின்றனர்
துவண்டுமே விழுகின்றனர்
மிஞ்சிக் கொண்டது சாவிற்கு கஞ்சா

பஞ்சாகப் பறக்கின்றனர் பறந்துமே மோதுகின்றனர்
கஞ்சாவைக் கண்டதும் கரும்பாகச் சுவைக்கின்றனர்
காய்ந்த மாடுகள் கம்பிலே விழுந்தது போல் கஞ்சா
கஞ்சாவும் வேண்டாம் காலனையும் தேடாதே
இச்ச்கொண்டே எமனையும் நாடாதே
கஞ்சாவின் எண்ணத்தை விரட்டிடவும் மாட்டாயா

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading