கணப்பொழுதில்

கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி

கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர் பேடி
அழிக்க நினைக்கும் புல்லுருவிகள் நிலைக்குமா
புனிதர்களின் இலட்சியங்கள் அழியுமா
ஆக்கவும் நினைக்காத ஆளுமைகள் வர்க்கம்
கறையான் புற்றெடுக்கப் பாம்புகள் குடிபுகுந்ததுபோல்
கண்ணியத்தை அழிக்கும் கயமவாதிகள் செயலும்
காலமும் உணர்த்திடும்
கடவுளின் தீர்ப்பும் கடுகதியில் வந்திடும்
கணப்பொழுதில் நீதியும் துலங்கியே நிற்கும்
கானத்தின் இசையாய் வாய்மையும் வரமாகும்
தீனச்செயலும் திருந்திட வழியும் ஏகும்
திருப்பம் தீர்வென திருந்திட வைக்கும்
..

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading