” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கணப்பொழுதில்

கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி

கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர் பேடி
அழிக்க நினைக்கும் புல்லுருவிகள் நிலைக்குமா
புனிதர்களின் இலட்சியங்கள் அழியுமா
ஆக்கவும் நினைக்காத ஆளுமைகள் வர்க்கம்
கறையான் புற்றெடுக்கப் பாம்புகள் குடிபுகுந்ததுபோல்
கண்ணியத்தை அழிக்கும் கயமவாதிகள் செயலும்
காலமும் உணர்த்திடும்
கடவுளின் தீர்ப்பும் கடுகதியில் வந்திடும்
கணப்பொழுதில் நீதியும் துலங்கியே நிற்கும்
கானத்தின் இசையாய் வாய்மையும் வரமாகும்
தீனச்செயலும் திருந்திட வழியும் ஏகும்
திருப்பம் தீர்வென திருந்திட வைக்கும்
..

Nada Mohan
Author: Nada Mohan