இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கண்டுபிடியுங்கள்

ஜெயம் தங்கராஜா

கவி 726

நிம்மதி கெடுக்கும் ஜென்மங்கள்

விரும்பி யாரும் அழைப்பதுமில்லை
அழையா விருந்தாளியாக உள்நுழைவார்
வந்தவர் போவாரென்றால் போகமாட்டார்
போனவர் வராரென்றால் பிறகும் வருவார்

யாவரும் வெறுக்கும் படைப்பு
கரைச்சல் தருகின்ற ஜென்மம்
பலருக்கு சிறுசிறு தொல்லைகள்
சிலருக்கு எல்லைகளில்லாத் தொல்லைகள்

நிம்மதியை குலைக்க என வரிந்துகட்டி
தனக்காக பிறர் நேரத்தை செலவழிக்கவைத்து
பணத்தைப் பறித்துக்கொண்டே வெளியேறும் பிறப்பு
இந்த அதிதியை அனுப்பிவைத்தாலே மகிழ்ச்சி

யார்தான் எவரென்று யோசிக்கின்றீர்களா
உங்களுக்கும் தெரியும் நன்றாக நம்புவீர்களா
எமபாதக செயல்களை கூடவிருந்து செய்யும்
அடுக்கடுக்கான துரோகங்களை எப்படித்தான் சொல்வது

எதிர்க்கக்கூடிய வலுமட்டும் இருந்திருந்தால்
பகைவர்களை ஓடவோட விரட்டிடலாம்
சக்தியில்லா தன்மையதால் அடிமையாக கைகட்டி
பயப்படுத்தும் இந்த பங்காளி பகையாளி

சுகத்தை சுமையாக்கிவிடும் நிகழ்ச்சி
இன்பத்தை குலைத்துவிடும் சம்பவம்
தீவிரவாதியாக பயங்கரவாதியாக உள்நுழைந்து அட்டகாசம்
ஒழித்துக்கட்ட பலவித ஆயுதங்களை எடுத்திடினும்
சாகாவரம்பெற்ற மார்க்கண்டேயனாய் இருந்துதரும் தொல்லைகளே

யாருக்கும் இந்தப்படைப்பு நன்மைசெய்ததாக சரித்திரமில்லை
ஊருலகம் வெறுத்தொதுக்கும் கேவலங்கெட்ட கூட்டமிது
பெரியவர்களென்றும் சிறியவர்களென்றும் தாக்குகின்ற காட்டுமிராண்டிகள்
இரக்கமற்ற அரக்க குணங்கொண்ட பூவுலகவாசிகள்

ஜெயம்
22-05-2024

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

Continue reading

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading