மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

கனவான காதல்

கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென செய்தாய் உளம் நெகிழ

உன் புன்னகையை சேமித்துக் கொண்டேனடி
உன் நிழலையும் காதலிக்க செய்தேனடி
கண்ணிலே வளர்ந்த காதலோ அன்று
எண்ணத்தை மாற்றி போனதேன் இன்று

சிரிப்பின் முகமூடி நாளுக்குள் அணிந்தபடி
பிரிவின் அழுகையை நான் சுமந்தபடி
உன் நினைவோ என்னைக் கொல்ல
கண்ணீரின் தத்துப்பிள்ளையானதை யாரிடம் சொல்ல

தோல்வி என்பது எனக்கு பழகியதே
வாழ்வோடு கூடாது காதலும் விலகியதே
நிஜமென நினைத்தது நிழலென ஆனது
மயக்கம் தீர்ந்தது காதலும் வீணது

ஜெயம்
09-02-2026

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading