மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கனவான காதல் 85

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026

மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை வெறித்துச்
சாய்ந்திருந்தாள் ஒரு சுந்தரி!

பெற்றோரின் காதலா? இல்லை
உடன்பிறந்தோர் பாசமா?
உறவுகளின் காதலா? இல்லை
ஊரின்மேல் கொண்ட ஏக்கமா.?

ஏனிந்த மௌனம்? ஏன் தானோ ஏக்கம்?
நெஞ்சம் கொஞ்சம் கனக்கிறது…
நேசமேதும் அருகில் அற்று
நெருங்கும் உறவும் யாருமற்று!

பேதையாகி நின்றவளைத் தாதி
பெரும் மனதோடு கட்டியணைத்து,
மீட்டெடுத்தாள் புன்னகையால் – அவள்
விரல் நுனியின் நாடித்துடிப்பால்!

காலங்களும் காட்சிகளும் மாற,
கனவான காதலும் வலித்திட…
மரண வாசலில் நின்றோரும் – இன்று
உயிர் மீட்பது பாச மொழி!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading