கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

கமலா ஜெயபாலன்

சிறுமை கண்டு பொங்குவாய்

கத்தி யின்றி ரெத்தம் மின்றி
கண்ணியமாய் வாழ்வது கவலையற்ற வாழ்வே
புத்தி யோடு புதுமையாகப் பிறக்கும்
புதிய வாழ்வே பொன்னான காலம்

உண்மைக்கு மதிப்பு இல்லை யிங்கு
உயர்வுக்கு தடையுண்டு யிங்கு
மண்ணுக்கு மணமுண்டு மனதிற்கு யிதமுண்டு
மலருக்கு மணமுண்டு மனிதற்கு குணமில்லை

ஏழை என்பான் எட்டியும் உதைப்பான்
ஏப்பம் விடுவான் ஏழையின் உழைப்பில்
வாழை யடியாய் வாழ்ந்தவனும் இன்று
வயிற்றிற்கு உணவின்றி வாடுகிறான் பாரில்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
உண்மயே உயர்வு ஊக்கமே ஆக்கம்
நன்றே செய்வோம் நல்லாய் வாழ்வோம்
நானிலம் ஓங்க நரிகளை விரட்டுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading