சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

சிறுமை கண்டு பொங்குவாய்

கத்தி யின்றி ரெத்தம் மின்றி
கண்ணியமாய் வாழ்வது கவலையற்ற வாழ்வே
புத்தி யோடு புதுமையாகப் பிறக்கும்
புதிய வாழ்வே பொன்னான காலம்

உண்மைக்கு மதிப்பு இல்லை யிங்கு
உயர்வுக்கு தடையுண்டு யிங்கு
மண்ணுக்கு மணமுண்டு மனதிற்கு யிதமுண்டு
மலருக்கு மணமுண்டு மனிதற்கு குணமில்லை

ஏழை என்பான் எட்டியும் உதைப்பான்
ஏப்பம் விடுவான் ஏழையின் உழைப்பில்
வாழை யடியாய் வாழ்ந்தவனும் இன்று
வயிற்றிற்கு உணவின்றி வாடுகிறான் பாரில்

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
உண்மயே உயர்வு ஊக்கமே ஆக்கம்
நன்றே செய்வோம் நல்லாய் வாழ்வோம்
நானிலம் ஓங்க நரிகளை விரட்டுவோம்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan