” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பட்டினி
————-
அடிவயிற்றின் ஆழத்தை
அளப்பது பசியே
விடியாத பொழுதுகள்
விளங்காத உறவுகள்
வீதீயில் கையேந்தி
பாதியில் உயிர்
பரிதாபமாக போக
நாதியற்ற இவர்களுக்கு
நீதிசொல்ல யாருமில்லை
நின்மதியும் அவர்க்கில்லை

பஞ்சத்தால் பட்டினியி்ல்
பரிதவிப்போர் கோடி
பாதகமாம் இயற்கையதன்
பருவ மாற்றத்தாலும்
வெஞ்சமரில் நாடுகள்
வெறி ஆட்டம் போடும்
வேளையிலும் பசிபஞ்சம்
விளைவாகி வாட்டும்

விலைவாசி ஏற்றத்தால்
வீடுபடும் பாடு
விளைச்சல் தரா
வேளைகளில் விவசாயிபாடு
அலைமோதும் கலவரங்கள்
ஆங்காங்கே நிகழ
அல்லல்களால் நாடெங்கும்
அவதியிலே வாடும்.

வல்லாளன் பொருள் குவிக்கும்
வழி நெறிகள் மாற
இல்லாதான் செல்வந்தன்
என்ற நிலை போக
எல்லோர்கும் எல்லாமே
பொதுஉடமை ஆகின்
இருக்காதே பசிபஞ்சம்
என்றும் இந்தபாரில்

Nada Mohan
Author: Nada Mohan