பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கமலா ஜெயபாலன்

பட்டினி
————-
அடிவயிற்றின் ஆழத்தை
அளப்பது பசியே
விடியாத பொழுதுகள்
விளங்காத உறவுகள்
வீதீயில் கையேந்தி
பாதியில் உயிர்
பரிதாபமாக போக
நாதியற்ற இவர்களுக்கு
நீதிசொல்ல யாருமில்லை
நின்மதியும் அவர்க்கில்லை

பஞ்சத்தால் பட்டினியி்ல்
பரிதவிப்போர் கோடி
பாதகமாம் இயற்கையதன்
பருவ மாற்றத்தாலும்
வெஞ்சமரில் நாடுகள்
வெறி ஆட்டம் போடும்
வேளையிலும் பசிபஞ்சம்
விளைவாகி வாட்டும்

விலைவாசி ஏற்றத்தால்
வீடுபடும் பாடு
விளைச்சல் தரா
வேளைகளில் விவசாயிபாடு
அலைமோதும் கலவரங்கள்
ஆங்காங்கே நிகழ
அல்லல்களால் நாடெங்கும்
அவதியிலே வாடும்.

வல்லாளன் பொருள் குவிக்கும்
வழி நெறிகள் மாற
இல்லாதான் செல்வந்தன்
என்ற நிலை போக
எல்லோர்கும் எல்லாமே
பொதுஉடமை ஆகின்
இருக்காதே பசிபஞ்சம்
என்றும் இந்தபாரில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading