12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
கமலா ஜெயபாலன்
தாய்நாடு
நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே
நிலையாக நீகொண்ட மண்வளமும் இனிதே
நீள்குளமும் வாய்க்காலும் நெற்கதிரும் சேர்ந்து
நின்மதியைத் தருமெங்கள் நாடெங்கள் நாடே
நலங்கண்டு வாழ்ந்திடுவோம் வற்றாத சொந்தம்
நல்லனவும் கெட்டனவும் நாலும்நாம் கலந்தே
நன்றியுடன் உறவாடி நற்பணிகள் செய்தும்
நலன்மிக்க பொன்கொளிக்கும் நாடெங்கள் நாடே
புலம்பெயர்ந்து வந்ததினால் முகமிழந்து வாழும்
புரியாத மொழியுடனும் போராடி முயன்றும்
பொறுமையுடன் இருக்கின்றோம் பிள்ளைகனின் வாழ்வால்
பொக்கிசமாம் தாய்மண்ணும் பொன்போன்ற நாடே
தலம்பலவும் கொண்டநிலம் தழிழ்மன்ன ராண்ட
திருத்தலங்கள் பாட்டினிலே சிறப்புமிகு நாடு
தருமின்பம் யாவருக்கும் தாய்நாடு தானே
தரணியிலே சிறந்ததுவே நாடெங்கள் நாடே
கமலா ஜெயபாலன்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...