மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

தாய்நாடு

நிலவளமும் நீர்வளமும் நீங்காத மாதே
நிலையாக நீகொண்ட மண்வளமும் இனிதே
நீள்குளமும் வாய்க்காலும் நெற்கதிரும் சேர்ந்து
நின்மதியைத் தருமெங்கள் நாடெங்கள் நாடே

நலங்கண்டு வாழ்ந்திடுவோம் வற்றாத சொந்தம்
நல்லனவும் கெட்டனவும் நாலும்நாம் கலந்தே
நன்றியுடன் உறவாடி நற்பணிகள் செய்தும்
நலன்மிக்க பொன்கொளிக்கும் நாடெங்கள் நாடே

புலம்பெயர்ந்து வந்ததினால் முகமிழந்து வாழும்
புரியாத மொழியுடனும் போராடி முயன்றும்
பொறுமையுடன் இருக்கின்றோம் பிள்ளைகனின் வாழ்வால்
பொக்கிசமாம் தாய்மண்ணும் பொன்போன்ற நாடே

தலம்பலவும் கொண்டநிலம் தழிழ்மன்ன ராண்ட
திருத்தலங்கள் பாட்டினிலே சிறப்புமிகு நாடு
தருமின்பம் யாவருக்கும் தாய்நாடு தானே
தரணியிலே சிறந்ததுவே நாடெங்கள் நாடே

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading